Sabbath and Special Days in the Bible | வேதாகமத்தில் ஓய்வுநாளும் விசேஷ நாட்களும்

BIBLE KNOWLEDGE  •  வேதாகம அறிவோம்

A Day, a Field and a Trumpet

ஒரு நாள், ஒரு நிலம், ஓர் எக்காளம்

What connected the seventh day, a field left unploughed, released loans and a trumpet heard once in fifty years?

ஏழாம் நாள், உழப்படாமல் விடப்பட்ட ஒரு நிலம், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலித்த எக்காளம்—இவற்றுக்கு என்ன தொடர்பு?

Their time, land, freedom and future belonged to God.அவர்களின் காலமும் நிலமும் விடுதலையும் எதிர்காலமும் தேவனுக்குரியவை.
🌿Every 7th daySabbathஓய்வும் நினைவுகூருதலும்
🌙Every monthNew Moonஒரு புதிய தொடக்கத்தின் அடையாளம்
🌾Every 7th yearSabbath Yearஓய்வு, விடுவிப்பு, நம்பிக்கை
📯Every 50th yearJubileeவிடுதலையும் மீட்பும்
1

The Weekly Sabbath

வாராந்திர ஓய்வுநாள்

Where did it begin?

அது எங்கே தொடங்கியது?

The Sabbath pattern reaches back to creation. God completed His work in six days, rested on the seventh day, and blessed it. His rest did not mean tiredness; His work of creation was complete.

ஓய்வுநாளின் தொடக்கம் படைப்பிலேயே காணப்படுகிறது. தேவன் ஆறு நாட்களில் தமது படைப்பை முடித்து, ஏழாம் நாளில் ஓய்வெடுத்து, அந்த நாளை ஆசீர்வதித்தார். அவர் களைத்துப் போனதால் ஓய்வெடுக்கவில்லை; படைப்பின் வேலை முழுமையடைந்ததால் ஓய்வெடுத்தார்.

Genesis 2:2–3ஆதியாகமம் 2:2–3

Before the Ten Commandments

பத்துக் கட்டளைகளுக்கு முன்பே

Through the manna, God taught Israel to gather twice as much on the sixth day. No manna appeared on the seventh day. The people had to stop gathering and trust the God who provided.

மன்னாவின் மூலம் தேவன் இஸ்ரவேலருக்கு ஓய்வுநாளைக் கற்றுக்கொடுத்தார். ஆறாம் நாளில் அவர்கள் இருமடங்கு சேகரித்தார்கள்; ஏழாம் நாளில் மன்னா கிடைக்கவில்லை. எனவே சேகரிப்பதை நிறுத்தி, தங்களைப் பராமரிக்கும் தேவனை நம்ப அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.

Exodus 16:22–30யாத்திராகமம் 16:22–30

Rest for the whole household

குடும்பம் முழுவதற்குமான ஓய்வு

The command included sons, daughters, servants, foreigners and even livestock. The Sabbath was not only personal rest; it protected others from being denied rest.

இந்தக் கட்டளை மகன்கள், மகள்கள், வேலைக்காரர்கள், அந்நியர்கள், கால்நடைகள் என அனைவருக்கும் ஓய்வு அளித்தது. ஓய்வுநாள் ஒருவருக்கான தனிப்பட்ட ஓய்வு மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் ஓய்வு கிடைப்பதை உறுதிசெய்தது.

Exodus 20:8–11யாத்திராகமம் 20:8–11
Remember the Creatorபடைத்தவரை நினைவுகூருங்கள்Exodus 20:8–11யாத்திராகமம் 20:8–11
Remember the Delivererவிடுவித்தவரை நினைவுகூருங்கள்Deuteronomy 5:12–15உபாகமம் 5:12–15
2

The Sabbath Year

ஓய்வு ஆண்டு

The rhythm of rest did not end with one day. Every seventh year, the land itself was given a Sabbath.

ஓய்வு என்பது ஒரு நாளோடு முடிந்துவிடவில்லை. ஒவ்வொரு ஏழாம் ஆண்டும் நிலத்திற்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது.

The land also rested

நிலமும் ஓய்வுபெற்றது

Every seventh year interrupted the normal cycle of sowing and harvesting.

ஒவ்வொரு ஏழாம் ஆண்டிலும் விதைப்பும் அறுவடையும் வழக்கம்போல் நடைபெறவில்லை.

Rest for the land

நிலத்திற்கு ஓய்வு

Israel was not to sow fields or prune vineyards in the ordinary way. What grew naturally could provide food for households, workers, foreigners, livestock and wild animals.

இஸ்ரவேலர் வயல்களில் விதைக்கவோ திராட்சைத் தோட்டங்களை வழக்கம்போல் பராமரிக்கவோ கூடாது. தானாக விளைந்தவை குடும்பத்தினருக்கும் வேலைக்காரர்களுக்கும் அந்நியர்களுக்கும் கால்நடைகளுக்கும் காட்டு விலங்குகளுக்கும் உணவாக இருந்தன.

Leviticus 25:1–7லேவியராகமம் 25:1–7

A year requiring trust

நம்பிக்கை தேவைப்பட்ட ஆண்டு

God promised that the sixth-year harvest would supply their needs. The land belonged to Him, and Israel lived upon it under His care.

ஆறாம் ஆண்டின் அறுவடை அவர்களின் தேவைகளுக்குப் போதும் என்று தேவன் வாக்குக் கொடுத்தார். நிலம் தேவனுடையது; அவருடைய பராமரிப்பில் இஸ்ரவேலர் அதில் வாழ்ந்தார்கள்.

Leviticus 25:20–23லேவியராகமம் 25:20–23

Release and generosity

கடன் விடுவிப்பும் தாராள மனமும்

The seventh-year law required loans made to fellow Israelites to be released. No one was to refuse help simply because the year of release was near.

ஏழாம் ஆண்டில் சக இஸ்ரவேலருக்குக் கொடுத்த கடன்களை வசூலிக்காமல் விட்டுவிட வேண்டும். அந்த ஆண்டு நெருங்கிவிட்டதே என்று நினைத்து, தேவையுள்ள ஒருவருக்கு உதவ மறுக்கக்கூடாது.

Deuteronomy 15:1–11உபாகமம் 15:1–11

A related seventh-year law

ஏழாம் ஆண்டுக்கான இன்னொரு கட்டளை

After six years of service, a Hebrew servant was to be released in the seventh year and not sent away empty-handed.

ஆறு ஆண்டுகள் வேலை செய்த எபிரெய வேலைக்காரர் ஏழாம் ஆண்டில் விடுவிக்கப்பட வேண்டும். அவரை வெறுங்கையோடு அனுப்பக்கூடாது.

Deuteronomy 15:12–15உபாகமம் 15:12–15

Scripture for everyone | அனைவருக்கும் வேதவசனம்

During the Feast of Tabernacles in the year of release, the Law was read publicly to men, women, children and foreigners.

விடுதலையின் ஆண்டில் கூடாரப் பண்டிகையின்போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அந்நியர்கள் என அனைவருக்கும் நியாயப்பிரமாணம் பொதுவாக வாசிக்கப்பட்டது.

Deuteronomy 31:10–13உபாகமம் 31:10–13
3

The Year of Jubilee

யூபிலி ஆண்டு

After seven Sabbath-year cycles came an even greater announcement: Jubilee.

ஏழு ஓய்வு ஆண்டு சுழற்சிகளுக்குப் பிறகு இன்னும் பெரிய அறிவிப்பு வந்தது: யூபிலி.

Liberty was proclaimed

விடுதலை அறிவிக்கப்பட்டது

The trumpet announced a year connected with return, release and restoration.

எக்காளம் யூபிலி ஆண்டு வந்ததை அறிவித்தது. அந்த ஆண்டில் மக்கள் தங்கள் குடும்ப நிலத்திற்குத் திரும்பலாம்; வேலைக்கார நிலையிலிருந்து விடுதலை பெறலாம்; இழந்த குடும்பச் சொத்தை மீண்டும் பெறலாம்.

A sound of freedom

விடுதலையின் முழக்கம்

The Jubilee was proclaimed with a trumpet on the Day of Atonement.

பாவநிவாரண நாளில் எக்காளம் முழங்கி யூபிலி ஆண்டை அறிவித்தது.

Leviticus 25:8–10லேவியராகமம் 25:8–10

When the trumpet sounded

எக்காளம் முழங்கியபோது

On the Day of Atonement, the trumpet proclaimed liberty throughout the land. For someone who had lost family property or entered service through poverty, Jubilee announced that loss did not have to become permanent.

பாவநிவாரண நாளில் எக்காளம் நாடு முழுவதும் விடுதலையை அறிவித்தது. வறுமையால் குடும்பச் சொத்தை இழந்தவர்களுக்கும் வேலைக்காரராக வாழ வேண்டியவர்களுக்கும், அவர்களுடைய இழப்பு நிரந்தரம் அல்ல என்ற நம்பிக்கையை யூபிலி கொடுத்தது.

Leviticus 25:8–13லேவியராகமம் 25:8–13

Liberty

விடுதலை

Israelite servants were released.

வேலைக்காரர்களாக இருந்த இஸ்ரவேலர்கள் விடுதலை பெற்றார்கள்.

Return

திரும்புதல்

Families returned to ancestral property.

குடும்பங்கள் தங்கள் பரம்பரை நிலத்தை மீண்டும் பெற்றன.

Rest

ஓய்வு

The land was not sown or harvested ordinarily.

நிலத்தில் வழக்கம்போல் விதைக்கவோ அறுவடை செய்யவோ இல்லை.

Was the land sold forever?

நிலம் நிரந்தரமாக விற்கப்பட்டதா?

No. Its price was calculated by the harvests remaining until Jubilee. God explained the reason plainly: the land belonged to Him.

இல்லை. யூபிலிவரை எத்தனை அறுவடைகள் மீதமிருந்தன என்பதைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது. காரணம் தெளிவாக இருந்தது: நிலம் தேவனுடையது.

Leviticus 25:14–16,23லேவியராகமம் 25:14–16,23
4

The New Moon

மாதப்பிறப்பு

The New Moon marked the beginning of a month in Israel’s calendar. Special offerings were added to the regular daily offerings, and trumpets were sounded.

மாதப்பிறப்பு இஸ்ரவேலரின் நாட்காட்டியில் புதிய மாதம் தொடங்கியதைக் குறித்தது. தினசரி பலிகளுடன் சிறப்புப் பலிகளும் செலுத்தப்பட்டன; எக்காளங்களும் ஊதப்பட்டன.

Numbers 10:10; 28:11–15எண்ணாகமம் 10:10; 28:11–15

David and Jonathan

தாவீதும் யோனத்தானும்

David was expected at Saul’s New Moon meal.

சவுலின் மாதப்பிறப்பு விருந்துக்கு தாவீது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

1 Samuel 201 சாமுவேல் 20

The Shunammite woman

சூனேமியப் பெண்

Her husband’s question suggests that visiting the prophet then was not unusual.

அந்த நாளில் தீர்க்கதரிசியைச் சந்திப்பது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கலாம் என்பதை அவளுடைய கணவனின் கேள்வி காட்டுகிறது.

2 Kings 4:22–232 இராஜாக்கள் 4:22–23

Worship and justice

ஆராதனையும் நீதியும்

The prophets warned that sacred days could not replace obedience and justice.

பரிசுத்த நாட்களை அனுசரிப்பது மட்டும் போதாது; கீழ்ப்படிதலும் நீதியும் அவசியம் என்று தீர்க்கதரிசிகள் எச்சரித்தார்கள்.

Isaiah 1:13–17ஏசாயா 1:13–17
5

Purim

பூரீம் பண்டிகை

The day was reversed

நிலைமை தலைகீழாக மாறிய நாள்

The date chosen for the destruction of the Jews became a time of deliverance and joy. Purim remembered more than survival; it remembered a complete reversal.

யூதர்களை அழிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளே விடுதலையும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக மாறியது. பூரீம் அவர்கள் உயிர்தப்பியதை மட்டுமல்ல; நிலைமை முழுவதுமாக மாறியதையும் நினைவுகூர்ந்தது.

Esther 9:1,20–22எஸ்தர் 9:1,20–22

Why the name “Purim”?

“பூரீம்” என்ற பெயர் ஏன்?

Haman cast the pur, meaning “lot,” to choose a date for his plan. The plural form, Purim, became the celebration’s name.

ஆமான் தனது திட்டத்திற்கான நாளைத் தேர்வு செய்ய “பூர்” என்ற சீட்டைப் போட்டான். “பூர்” என்பதன் பன்மை வடிவமே “பூரீம்”; அதுவே இந்தப் பண்டிகையின் பெயரானது.

Esther 3:7; 9:24–26எஸ்தர் 3:7; 9:24–26

How was it celebrated?

எப்படி கொண்டாடப்பட்டது?
Feasting and gladnessவிருந்தும் மகிழ்ச்சியும்
Food shared with othersஒருவருடன் ஒருவர் உணவைப் பகிர்தல்
Gifts to the poorஏழைகளுக்குப் பரிசு கொடுத்தல்
Deliverance rememberedவிடுதலையை நினைவுகூருதல்

Although God’s name is not directly mentioned in Esther, the remarkable sequence of events points readers to His unseen providence.

எஸ்தர் புத்தகத்தில் தேவனுடைய பெயர் நேரடியாக வரவில்லை. ஆனாலும், ஒன்றன்பின் ஒன்றாக நடந்த சம்பவங்கள், காணப்படாத விதத்தில் தேவன் செயல்பட்டதை உணர்த்துகின்றன.

6

The Feast of Dedication

பிரதிஷ்டைப் பண்டிகை

This later Jewish observance, commonly called Hanukkah, remembered the cleansing and rededication of the temple after it had been defiled. John records that it was winter and Jesus was walking in Solomon’s Colonnade.

பிற்காலத்தில் தொடங்கிய இந்த யூதப் பண்டிகை ஹனுக்கா என்றும் அழைக்கப்படுகிறது. தீட்டுப்படுத்தப்பட்ட ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டதை இது நினைவுகூர்ந்தது. அப்போது குளிர்காலம்; இயேசு சாலொமோனின் மண்டபத்தில் நடந்துகொண்டிருந்தார் என்று யோவான் பதிவு செய்கிறார்.

John 10:22–30யோவான் 10:22–30

Historical background | வரலாற்றுப் பின்னணி

The temple’s rededication belongs to Jewish history. John mentions the feast but does not narrate its origin. It was not one of the festivals commanded through Moses.

ஆலயம் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சம்பவம் யூத வரலாற்றைச் சேர்ந்தது. யோவான் இந்தப் பண்டிகையைக் குறிப்பிடுகிறார்; ஆனால் அது எப்படி தொடங்கியது என்பதை விளக்கவில்லை. மோசே மூலம் கொடுக்கப்பட்ட பண்டிகைகளில் இது இல்லை.

7

Jesus and the Sabbath

இயேசுவும் ஓய்வுநாளும்

By the time of Jesus, the Sabbath was surrounded by debate. Jesus brought attention back to God’s authority, human need and mercy.

இயேசுவின் காலத்தில் ஓய்வுநாளைப் பற்றி பல விவாதங்கள் இருந்தன. ஆனால் இயேசு, தேவனுடைய அதிகாரம், மனிதரின் தேவை, இரக்கம் ஆகியவற்றை மீண்டும் முக்கியமாக எடுத்துக் காட்டினார்.

Lord of the Sabbath

ஓய்வுநாளின் ஆண்டவர்

When His hungry disciples plucked grain, Jesus explained that the Sabbath was made for humanity and declared that the Son of Man is Lord even of the Sabbath.

பசியாயிருந்த சீடர்கள் தானியக்கதிர்களைப் பறித்தபோது, ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது என்று இயேசு விளக்கினார். மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர் என்றும் கூறினார்.

Mark 2:23–28மாற்கு 2:23–28

Released after eighteen years

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

Jesus called her a “daughter of Abraham” and said she ought to be released—even on the Sabbath.

அவளை “ஆபிரகாமின் மகள்” என்று அழைத்த இயேசு, ஓய்வுநாளாக இருந்தாலும் பதினெட்டு ஆண்டுகளாக அவளைப் பிணைத்திருந்த நோயிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றார்.

Luke 13:10–17லூக்கா 13:10–17

Mercy on the Sabbath

ஓய்வுநாளில் வெளிப்பட்ட இரக்கம்

The withered hand

சூம்பிய கையுடையவர்

Jesus asked whether it was lawful to do good and then restored the man’s hand.

ஓய்வுநாளில் நன்மை செய்வது நியாயமா என்று இயேசு கேட்டார்; பின்னர் அந்த மனிதரின் கையைச் சுகமாக்கினார்.

Mark 3:1–5மாற்கு 3:1–5

A man with dropsy

உடல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்

Jesus healed a man suffering from dropsy and sent him away on the Sabbath.

ஓய்வுநாளில் உடல் வீக்கத்தால் அவதிப்பட்ட ஒருவரை இயேசு குணமாக்கி அனுப்பினார்.

Luke 14:1–6லூக்கா 14:1–6

Bethesda

பெதஸ்தா

Jesus healed a man who had suffered for thirty-eight years.

முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோயால் அவதிப்பட்ட ஒருவரை இயேசு குணமாக்கினார்.

John 5:1–17யோவான் 5:1–17
Did you know? Jesus also gave sight to a man born blind on a Sabbath. பிறவியிலிருந்தே பார்வையற்ற ஒருவருக்கும் இயேசு ஓய்வுநாளில் பார்வை கொடுத்தார். John 9:1–34யோவான் 9:1–34
8

Sabbath and the Early Church

ஓய்வுநாளும் ஆரம்பகாலத் திருச்சபையும்

Paul often entered synagogues on the Sabbath and reasoned from Scripture with Jews and others who worshipped God. He used these gatherings as opportunities to proclaim Jesus.

பவுல் ஓய்வுநாளில் ஜெப ஆலயங்களுக்குச் சென்று, யூதர்களுடனும் தேவனை வணங்கிய மற்றவர்களுடனும் வேதவசனங்களிலிருந்து விளக்கிப் பேசினார். இந்தக் கூடுகைகளை இயேசுவைப் பற்றி அறிவிக்க அவர் பயன்படுத்தினார்.

Acts 13:14–16; 17:1–3; 18:4அப்போஸ்தலர் 13:14–16; 17:1–3; 18:4

The New Testament also records believers gathering to break bread on the first day of the week. Christ rose from the dead on the first day.

வாரத்தின் முதல் நாளில் விசுவாசிகள் அப்பம் பிட்டு ஒன்றுகூடியதையும் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது. கிறிஸ்து வாரத்தின் முதல் நாளில் உயிர்த்தெழுந்தார்.

Matthew 28:1–6; Acts 20:7மத்தேயு 28:1–6; அப்போஸ்தலர் 20:7
9

Understanding Special Days Today

இன்றைய விசேஷ நாட்களைப் புரிந்துகொள்வோம்

Do not judge one another

ஒருவரையொருவர் நியாயந்தீர்க்காதிருங்கள்

Paul wrote that one person may esteem one day above another while another esteems every day alike. Each should act in honour of the Lord.

ஒருவர் ஒரு நாளை மற்ற நாட்களைவிட முக்கியமானதாகக் கருதலாம்; இன்னொருவர் எல்லா நாட்களையும் ஒரேபோலக் கருதலாம் என்று பவுல் எழுதினார். இருவரும் கர்த்தரை மதிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்.

Romans 14:5–6ரோமர் 14:5–6

Believers were not to be judged concerning a festival, New Moon or Sabbath. Paul described them as a shadow, with their substance found in Christ.

பண்டிகை, மாதப்பிறப்பு, ஓய்வுநாள் ஆகியவற்றைக் குறித்து யாரும் விசுவாசிகளை நியாயந்தீர்க்கக்கூடாது. இவை வரவிருந்தவற்றின் நிழல்; அவற்றின் நிறைவு கிறிஸ்துவில் உள்ளது என்று பவுல் எழுதினார்.

Colossians 2:16–17கொலோசெயர் 2:16–17
10

The Greater Rest

மேலான இளைப்பாறுதல்

Hebrews looks beyond Israel’s weekly and national rest to the deeper rest God provides. It calls God’s people to enter His rest through faith and warns against unbelief and disobedience.

எபிரெயர் நிருபம் இஸ்ரவேலின் வாராந்திர மற்றும் தேசிய ஓய்வைக் கடந்து, தேவன் தரும் ஆழமான இளைப்பாறுதலைக் காட்டுகிறது. விசுவாசத்தின் மூலம் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் வரும்படி அழைக்கிறது; அவிசுவாசத்தையும் கீழ்ப்படியாமையையும் குறித்து எச்சரிக்கிறது.

Hebrews 4:1–11எபிரெயர் 4:1–11

Sacred Times at a Glance

பரிசுத்த காலங்கள்—ஒரே பார்வையில்

Weekly Sabbath

வாராந்திர ஓய்வுநாள்

When | எப்போதுEvery seventh dayஒவ்வொரு ஏழாம் நாளும்

Purpose | நோக்கம்Rest and remembranceஓய்வும் நினைவுகூருதலும்

Exodus 20:8–11யாத்திராகமம் 20:8–11

New Moon

மாதப்பிறப்பு

When | எப்போதுBeginning of each monthஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும்

Purpose | நோக்கம்A marked new beginningபுதிய தொடக்கத்தின் அடையாளம்

Numbers 28:11–15எண்ணாகமம் 28:11–15

Sabbath Year

ஓய்வு ஆண்டு

When | எப்போதுEvery seventh yearஒவ்வொரு ஏழாம் ஆண்டும்

Purpose | நோக்கம்Rest, release and trustஓய்வு, விடுவிப்பு, நம்பிக்கை

Leviticus 25:1–7லேவியராகமம் 25:1–7

Jubilee

யூபிலி ஆண்டு

When | எப்போதுThe fiftieth yearஐம்பதாம் ஆண்டு

Purpose | நோக்கம்Liberty and restorationவிடுதலையும் மீட்பும்

Leviticus 25:8–13லேவியராகமம் 25:8–13

Purim

பூரீம்

When | எப்போதுAdar 14–15ஆதார் மாதம் 14–15

Purpose | நோக்கம்Remembering deliveranceவிடுதலையை நினைவுகூருதல்

Esther 9:20–28எஸ்தர் 9:20–28

Dedication

பிரதிஷ்டைப் பண்டிகை

When | எப்போதுWinter observanceகுளிர்காலத்தில்

Purpose | நோக்கம்Remembering the temple’s rededicationஆலயம் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டதை நினைவுகூருதல்

John 10:22–23யோவான் 10:22–23

Five Lasting Lessons

நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து பாடங்கள்
Time belongs to God.காலம் தேவனுக்குரியது.
🌿Rest requires trust.ஓய்வெடுக்க நம்பிக்கை தேவை.
🕊️Freedom should lead to mercy.விடுதலை நம்மை இரக்கமுள்ளவர்களாக மாற்ற வேண்டும்.
⚖️Worship cannot be separated from justice.ஆராதனையை நீதியிலிருந்து பிரிக்க முடியாது.
Jesus brings true rest and restoration.இயேசு உண்மையான இளைப்பாறுதலையும் மீட்பையும் அளிக்கிறார்.

Continue Exploring

தொடர்ந்து அறிந்துகொள்ளுங்கள்

The seven major festivals given to Israel are explained in our companion study.

இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட ஏழு முக்கிய பண்டிகைகளை நமது தொடர்புடைய பதிவில் அறிந்துகொள்ளலாம்.

Bible Festivals | வேதாகமப் பண்டிகைகள் →
Let us grow with Scripture.தேவனுடைய வார்த்தையில் வளர்வோம்.